Saturday, July 19, 2014

வெள்ளிவிழா ஆண்டு ஒன்றுகூடல்


பணி நிமித்தமாகச் சென்னையில் நடக்கும் மேற்படி விழாவில் என்னால் கலந்து கொள்ளமுடியாத சோக நிலை. சுமார் ஐம்பது பேர் கிழக்குக் கடற்கரைச்சாலையில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் இன்று கூடிக் களிக்கிறார்கள். அலைபேசியினூடே தொடர்ந்து செய்திகளும்,படங்களும் வந்த வண்ணம் உள்ளன. இன்று இரவு நானும் நண்பன் பாலி எனப்படும் பாலமோகனும் வீடியோ கான்ஃபரன்சிங்கில் கலந்து கொள்ள வாய்ப்புக்கள் உள்ளன. உடலால் இங்கு இருப்பினும் உள்ளமெல்லாம் என் நட்புக்களைச்சுற்றியே. 

* மேலேயுள்ள வால்பேப்பரில் கவிதை வரிகள் என் உபயம் என்பது உபரித்தகவல் !