மனிதனின் மிகப் பெரிய உந்துதலே தேடல்தான். பிறந்த குழந்தை தன்னுயிரைத் தக்க வைக்கும் முதல் முயற்சியே அன்னையிடமான உணவுக்கான தேடல் மூலம்தான். அன்று தொடங்கி வாழ்வின் எல்லா நிலைகளிலும் தேடலே நம்மை இயக்குகிறது. சுவாசப்பைகள் காற்றைத் தேடுவதை நிறுத்தும் வேளை சகலமும் முடிந்து போகிறது.