Saturday, March 2, 2013

ஏக்கம்




அண்ணாந்து பாத்துப் பாத்து கழுத்து வலியெடுத்துப் போச்சு.

சே, வருண பகவான் இந்த முறையும் கை விரிச்சிட்ட மாதிரி தெரியுது.

காப்பித்தண்ணி கேட்டா கெழவி வையறா.

பாவம், அவளும் என்னதான் செய்வா,

கையில, காதுல, கழுத்துலன்னு உள்ளதெல்லாம் போச்சு,

வேளாமையும் கை விட்டுருச்சி.

பெத்த புள்ளைங்களும் படிச்சு வெளியூருன்னு போய்ட்டாய்ங்க.

இனி இங்க வரவா போராய்ங்க.

இன்னைக்கிண்ணு பாத்து இந்தப் பய புள்ளய இன்னும் காணோம்,

சவரம் பண்ணி நாளாச்சு.

நண்பேன்டா !




எப்படி இருக்கீங்க?

எங்க இருக்கீங்க?

என்ன செய்யிறீங்க?

கூட யாரு,யாரெல்லாம் இருக்காங்க?

டுட்டி எப்படியிருக்காங்க? அவங்க அம்மா ? அவங்க அப்பாவோட அம்மா?

விஸ்வரூபம் பாத்தாச்சா? 

வீ ஜீ எங்க இருக்காரு? இன்னும் கொச்சினா?

பாண்டியன் சார் யாரோட இருக்காரு?

ஞானமும், வேலுவும் என்ன பண்ணுது?

அம்மா ஆட்சி நல்லாருக்கா?

பொட்டு சுரேஷ ஏன் போட்டு தள்ளிட்டாங்க?

'அட்டாக்' பாண்டி நம்ம பாண்டியன் சாருக்கு வேண்டப்பட்டவரா?

பவர் ஸ்டாரப் பாத்திங்களா? 



பி.கு : இத்தன கேள்விகளுக்கும் பதில் சொன்னா பரிசு கூப்பன் கொடுக்க சிபாரிசு பண்ணலாம்.

பி.கு 2 : இது என் தூத்துக்குடி(யில் பழகிய) சென்னை வாழ் நண்பர் ஒருவருக்கு அனுப்பிய மடலின் பிரதி. வழக்கம்போல பதில் வரல.