அண்ணாந்து பாத்துப் பாத்து கழுத்து வலியெடுத்துப் போச்சு.
சே, வருண பகவான் இந்த முறையும் கை விரிச்சிட்ட மாதிரி
தெரியுது.
காப்பித்தண்ணி கேட்டா கெழவி வையறா.
பாவம், அவளும் என்னதான் செய்வா,
கையில, காதுல, கழுத்துலன்னு உள்ளதெல்லாம் போச்சு,
வேளாமையும் கை விட்டுருச்சி.
பெத்த புள்ளைங்களும் படிச்சு வெளியூருன்னு போய்ட்டாய்ங்க.
இனி இங்க வரவா போராய்ங்க.
இன்னைக்கிண்ணு பாத்து இந்தப் பய புள்ளய இன்னும்
காணோம்,
சவரம் பண்ணி நாளாச்சு.