Thursday, February 28, 2013

ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ( நமக்கு !)



+2 படிக்கும் காலங்களில் ராதா,அம்பிகா திரையுலகில்  கோலோச்சினார்கள். எந்தப் பெரிய நடிகரின் படங்களாயினும் இவர்கள்தான் நாயகிகள். ஆரம்பத்தில் ராதாமீது பிரேமம்  கொண்டு நாளாக, 
நாளாக அது மங்கிப்போய் விட்டது. ரேவதி,நதியா,அமலான்னு எல்லாரையும் பிடித்த காலம் ஒன்று.
(ஒருத்தர விட்டுட்டு இன்னொருத்தர மட்டும் விரும்பிறது ஏனோ மனசுக்கு சரியாய்ப் படல !) அவங்க சீசன் முடிஞ்சதும் குஷ்பு,மீனான்னு அரியாசனம் ஏறினாங்க. மக்களும் (நானும் அதில அடக்கம்) எத்தனை நாயகிகள் வந்தாலும் எல்லோருக்கும் ஆதரவ வாரி,வாரி வழங்கினாங்க. அப்புறம் சிம்ரன், கொடியிடையக் காட்டி தமிழகத்தையே (ஆந்திரா,கர்னாடகம் உட்பட) தனது கொசுவத்தில சொருகிக்கிட்டாங்க. ஜோதிகா, ஸ்னேகான்னு குடும்பக் குத்துவிளக்குகளும் (விளம்பரப்படங்களில் செம சில்லறை) நமிதா,மும்தாஜ், மாளவிகா போன்ற கவர்ச்சி வெடி(குண்டு)களும் அவரவர் ரேஞ்சுக்குத் தக்கமாதிரி விரும்பப்பட்டார்கள். (ஆனா, வெளியுலகத்துக்கு இப்படி அரையும் குறையுமா திரியிறாளுகன்னு (பொய்) சமுதாய நோக்கு வேறு) 

அடுத்த அலை த்ரிஷா,நயன்தாரா,அசின் ரூபத்தில் வர, ரசிகர்களுக்கு ஆனந்தக் கொண்டாட்டம் ! இது இப்ப தமன்னா,அனுஷ்கா,அமலா பால்னு சமந்தாவில வந்து நிக்குது. ஆனா, இதுவும் கடந்து போகும். சரி, தலைப்புக்கு வருவோம். நமக்கு ஏன் நடிகைகளைப் பிடிக்கிறது? ஒண்ணப் பாத்தோன்னே பிடிக்கணும்னு ஒண்ணும் கட்டாயமில்ல. பாக்கப்பாக்கப் புடிக்கும். இந்த ஃபார்முலாதான் இங்க வொர்க் அவுட் ஆவுது. 

எந்தப் பத்திரிக்கையப் பாத்தாலும் இந்தப் பொண்ணுங்கதான் தென்படுது. அதிலவேற நம்ம சமுதாய அமைப்பு ஆணையும் பெண்ணையும் பிரிச்சே வக்கிறதனால இதுகமேல ஒரு ஈடுபாடு தன்னாலயே வந்திடுது. ஒருத்தனுக்குப் புடிச்சது இன்னொருவனுக்குப் புடிக்கணும்னு ஒண்ணும் அவசியமே இல்ல. அதனால அவனவன் டேஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி ஒண்ண மனசுல பதிச்சிக்கிறானுங்க. கல்யாணம்,காட்சி எல்லாமே இப்ப இருபதுகளின் கடைசியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் வருவதால், அதுவரை இந்த நடிகைகள்தான் கனவில் ஆடி,ஓடி,டூயட் பாடி பாச்சுலர் வாழ்க்கையை சுவாரசியமாக்குகிறார்கள். (விதிவிலக்குகள் கண்டிப்பா உண்டு) 

கல்யாணம் முடிஞ்சு நமக்கின்னு ஒருத்தி வந்தபின்னர் இந்தப் பிரேமை குறைய வாய்ப்புண்டு. ஆனாலும் பழைய நினைவுகள் மனதில் நிறைந்திருக்கும். சிலருக்கு கனவுகளில் தொடரும், (தொந்தியைத் தூக்கிக்கொண்டு, மூச்சு வாங்கி ஆடிப்பாடுவதுபோல் யாருக்கும் கனவு வருவதுண்டா?) 

எனக்குத் தெரிஞ்சவங்க வீட்டுல சரோஜாதேவி பாட்டுப் போகையில அந்த வூட்டுக்காரர் வச்ச கண் வாங்காம அவங்களையே முழுங்கிற மாதிரிப் பார்க்கிரதையும், அந்த வெறுப்ப அவர் வூட்டம்மா சமையல் பாத்திரங்கள்கிட்ட காட்டுறதையும் பல முறை பாத்திருக்கேன். ஆக, இது பல தல முறை கண்ட நமது பண்பாடுபோல.


பின்குறிப்பு :
ரேவதிப்பிரியன்னு ஒருத்தர். நடிகை ரேவதியோட ரசிகரா இருப்பாருன்னு நெனைக்கிறேன். ரேவதிக்கு கல்யாணம் நடந்தப்ப எங்க ரூம் போட்டு, எத்தன நாள் அழுதாருன்னு யாருக்காச்சும் தெரியுமா? இல்ல அந்தப் பேருக்காகவே அதே பேருள்ள வேற பொண்ணத் தேடிப் புடிச்சுக் கட்டிக்கிட்டாரான்னும் தெரியல. ஒரு வேள அவர் பொண்டாட்டி பேரு வேற ஏதுமா இருந்திருந்தா கண்டிப்பா அந்தம்மா இந்தப் பேர மாத்தச் சொல்லி அழுது,அடம் பண்ணியிருக்கும். ஆமா, உண்மையிலேயே பொண்டாட்டி பேரப்போட்டு பின்னாடி பிரியன்னு சேத்துக்கிட்ட யாராச்சும் இருக்காங்களா?




Monday, February 25, 2013

சமையல் - ஜாலியா இருக்கு !


முதல்ல மாப்பிள்ள ஸ்ரீகாந்தனுக்கு ஒரு பெரிய நன்றி. ஏன்னா சமையல்மேல ஒரு பிடிப்பு வருவதற்கு அவன் வாங்கிக் கொடுத்த ப்ரஷர் குக்கர் ஒரு காரணம். அதுக்கு மேல அவன் சமையல் பண்ற ஸ்டைல். ரொம்ப அனுபவிச்சிப் பண்ணுவான். இங்க கத்தார் வந்த பிறகு அனேகமா ஒவ்வொரு வெள்ளியும் அவன் வீட்லதான் மதிய சாப்பாடு. இன்னொரு நண்பர் கௌரிஷங்கரும் கூட சேர்ந்து நளபாகத்தில கலக்குவாங்க. வெளியில சாப்பிட்டு, நாக்கு செத்துப் போய் இருப்பவனுக்கு வீட்டு சமையல் தேவாமிர்தமாய் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாள்தான் இந்த குக்கர் வாங்கின நன்னாள். மறுநாள் தைரியமா சாதமும் பருப்பும் வச்சு வெள்ளோட்டம் பார்த்தேன். மனசுல கொஞ்சம் பயம், எங்கடா வெய்ட்டு பிச்சுக்கிட்டு போயுடுமோ இல்ல தண்ணி பத்தாம சாதம் கருகிப் போயிடுமோன்னெல்லாம் மனக்கிலேசம். ஒரு மாதிரி 6 விசில் வந்தோன்னே ஸ்டவ்வ நிறுத்தி, அரை மணி ஆற விட்டுத் திறந்து பாத்தப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எந்த சேதாரமும் இல்லாம பருப்பும் சாதமும் வெந்திருந்துச்சு. என்ன சாதத்தில கொஞ்சம் தண்ணி ஜாஸ்தியாயிருந்துச்சு. பரவாயில்ல, திருஷ்டிக்குன்னு எடுத்துக்கிட்டேன். தக்காளி,வெங்காயம், பூண்டு,பச்ச மொளகா எல்லாத்தையும் வெட்டியெடுத்து அதோட சிக்கன் சாசேஜயும் சேத்து, வானலியில் எண்ணை விட்டு, அதுக்கும் கொஞ்சம் பயந்து, பின்னர் ஒரு மாதிரி சைட் டிஷ்ஷும் ரெடி பண்ணியாச்சு. என்னடா ஒரு வாசனையும் வரலியேன்னு வெள்ளேந்தியா யோசிச்சேன். (பிறகுதான் தெரியும், அது வர மசாலா ஐட்டமெல்லாம் சேக்கணுமாம்) ஏதோ அன்னைய பொழப்பு ஓடிருச்சு. மனசுல ஏகப்பட்ட குஷி. நானும் ரௌடிதான்,நானும் ரௌடிதான்னு வடிவேலு ஜெயிலுக்குப் போன கதையா, சமையல் எனக்கும் வருமில்லன்னு நிரூபிச்சாச்சு. இதெல்லாம் விடப் பெரிய தொல்ல, பண்றத அப்படியே ஊர்ல இருக்கிற சீனியர் சமையல்காரருக்கு ( பொண்டாட்டிங்க) வெளங்கப் படுத்தணும். கொஞ்சம் பில்ட் அப் கொடுத்து, மானே தேனே பொன்மானேல்லாம் போட்டுச் சொன்னாலும் ஏதாச்சும் குறை கண்டிப்பா இருக்கும் ! பரவால்ல, இப்ப நாளுக்கு நாள் எதாச்சும் புதுசு புதுசா ட்ரை பண்றேன்.

பி.கு : மீட் பால் கறி இங்க ஹிட்டாச்சு. நண்பர் ஒருவர் ரெசிப்பி கேட்டாருன்னா பாத்துக்கோங்க....!

Tuesday, February 19, 2013

(டின்)மீன் குழம்பு


செய்முறை விளக்கம்

புளி கொஞ்சம் எடுத்து நல்லா கரைக்கோணும். தக்காளி,வெங்காயம்,பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் ஐட்டங்கள அளவா வெட்டி ரெடி பண்ணிக்கோங்க. மஞ்சள் தூள், மிளகாத்தூள்,  மீன் மசாலாத்தூள்,உப்பு எல்லாத்தையும் ரெடியா வச்சுக்கோங்க. முக்கியமா கடுகு, உளுத்தம்பருப்பு. 

அடுப்ப பத்த வச்சு கடாயை அதில சூடு பண்ணுங்க. எண்ண அளவா விட்டு, கொதி லைட்டாக் கிளம்பினோன்னே கடுகு/உளுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க. அப்படியே வெட்டி வச்ச ஐட்டத்தயெல்லாம் உள்ள தள்ளுங்க.

இப்ப டின்ல உள்ள மீன லாவகமா அந்த கொதிக்குற மிக்ஸ்ல போடுங்க. கவனம், மீன் ஒடஞ்சிடாம.

இப்ப அந்த புளி கரைசல எடுத்து அதில ஊத்துங்க. கொஞ்சம் கொதிக்க விடுங்க.

மிளகாத்தூள், மஞ்சள் தூள், மசாலா,உப்பு எல்லாம் அளவா சேத்துக்கோங்க.

இப்ப மூடி வச்சுட்டு, அடுப்ப ஸிம்மில வையுங்க.

கொஞ்ச நேரத்தில ரெடியாயிடும்.

ரொட்டி, சாதம் எதுக்கு வேணும்னாலும் தொட்டுக்கலாம்.

பின் குறிப்பு : 

இந்த ஷ்ரேயா கோஷல் பாட்டக் கேளுங்க. மொழி புரிஞ்சாலும், புரியாட்டியும் உள்ள என்னமோ பண்ணும்…..






கோழிக்கறி உருண்டை பிரட்டல்


முன்னுரை

போன வாரம் நம்ம ரெசிப்பிக்கு மிகப் பெரிய ஆதரவளித்த அனைவர்க்கும் ரொம்ப நன்றி.

எப்படிச் செய்வது?

இன்னைக்கு கோழிக்கறி உருண்டைப் பிரட்டல். இதுக்கு கடைகளில் கிடைக்கும் சிக்கன் 

மீட் பால்ஸ் வாங்கி நல்லா குளிர் போகும்வரை ஆறவிடுங்க. வழக்கம் போல தக்காளி, 

வெங்காயம், பச்ச மொளகா, பூண்டு, கறிவேப்பிலை ஐட்டங்களை எடுத்து ஒழுங்கு 

மரியாதையா கழுவி,அளவா வெட்டிக்கோங்க. அந்த மீட் பால்ஸ் பெருசாயிருந்தா துண்டு 

துண்டா வெட்டிக்கலாம். அடுப்ப பத்த வச்சு கடாய அதில வையுங்க. கொஞ்சமா எண்ணை 

ஊத்தி இதமான சூடு வரும்போது கடுகு, உழுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க. இதில 

தக்காளி இத்யாதி ஐட்டங்களைப் போடுங்க. அப்படியே அந்த கோழி உருண்டைகளையும் 

சேத்துக்கோங்க. தண்ணி அளவா காட்டோணும். இத கொஞ்சம் கொதிக்க வுடுங்க. கொஞ்ச 

நேரம் போனதும் சிக்கன் மசாலத்தூள் மற்றும் சிக்கன் சூப் க்யூப் தூள் இத்துடன் 

சேர்த்துடுங்க. பதமாப் பாத்து இறக்கிடுங்க.


கண்டுபிடிப்பு :

சமைக்கும்போது பாட்டுக் கேட்பது சுவாரசியம். 5 பாட்டு கேட்பதுக்குள்ள சமையல் முடிஞ்சிடும். 

நான் சிபாரிசு பண்ணும் 5 பாட்டு (ராஜா ஹிட்ஸ் 1982) :


1.    ஓ நெஞ்சமே - எனக்காகக் காத்திரு - ஜானகி/தீபன் சக்கரவர்த்தி


2. இளம் பனித்துளி விழும் - ஆராதனை - ஜென்சி



3. பூ வாடைக்காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை - ஜானகி/கிருஷ்ணசந்தர்



4. காலங்கள் மழைக்காலங்கள் - இதயத்தில் ஓர் இடம் - ஜானகி/மலேசியா வாசுதேவன்



5. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட்- சைலஜா/தீபன் சக்கரவர்த்தி



பின் குறிப்பு

போன வாரம் பின் குறிப்பப் பாத்து வீட்டுக்காரம்மா சண்டை போடாத குறை, என்ன இருந்தாலும் அவங்க அளவுக்கு நம்ம சமையல் வராது. ஆனா, சீக்கிரம் வரும். நம்பிக்கைதாங்க வாழ்க்க…… 

Sunday, February 10, 2013

எதிர்பார்ப்பு




சொன்னா நம்ப மாட்ட
எங்கூட இருந்தவங்க நான் பண்றதப் பாத்து சந்தோஷமா தலை ஆட்டினாங்க
தப்பா இருந்திருந்தா நிச்சயமா ஏதாச்சும் சொல்லியிருப்பாங்க
ஒண்ணுமே சொல்லாம கடைசிவரை புன்சிரிப்போடயே இருந்தாங்க
இதுல என்ன கூடுதல் சிறப்புண்ணா அவங்க ஒங்க ஊர்க்காரங்க
இதக் கேட்டோன்னே எனக்கு அவங்கள
இப்பவே பாக்கணும்னு தோணிச்சு
சைக்கிள ஒரே மிதி கூடவே இந்தப் பய
வேர்த்து விறுவிறுத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க
போய் பாத்தா….

சமையல் குறிப்பு


சாசேஜ் முட்டை தொக்சு


எப்படிச் செய்வது?

முதல்ல முட்டைய எடுத்து நல்லா கழுவிக்கோங்க.ஏன்னா அது எந்த வழியா வருதுன்னு 

தெரியுமில்ல. அடுத்து சாசேஜ ஃப்ரீசரிலிருந்து எடுத்து ஆற விடுங்க. மாமன்,மச்சான்,தாய் 

மாமன்,பங்காளி இல்லாமக் கல்யாணமா? என்ன முழிக்கிறீங்க, அதுதாங்க 

தக்காளி,வெங்காயம், பச்ச மொளகா, பூண்டு ஐட்டங்களை எடுத்து ஒழுங்கு மரியாதையா 

கழுவி,அளவா வெட்டிக்கோங்க. கண்ணு கலங்கும்,அழுக அழுகையா வரும். பழைய 

சிவாஜி படத்தில வரும் சோகக் காட்சிய மனசுல கொண்டாங்க. டைமிங்க் சூப்பரா 

இருக்கும். இப்ப முட்டைய ஒடச்சு ஊத்தி, (தரையில இல்லீங்க பயங்கரமா வாட அடிக்கும்) 

அளவா உப்பு, மிளகுத்தூள் (இதுக்கு கிராம் கணக்கெல்லாம் தெரியாது, கண் பாக்கிறத கை 

செய்யணும் அவ்வளவுதான்) சேர்த்து நல்லா பீட் பண்ணிக்கோங்க. இஷ்ட தெய்வத்த 

மனசுல நெனச்சுக்கிட்டு, இப்ப ஸ்டவ்வ பத்த வச்சு கடாய அதில வையுங்க. எண்ண 

கொஞ்சம் சேருங்க. (சுத்தமான கடலெண்ணதானே?) கடுகு கொஞ்சம் காட்டுங்க, மூட் 

அவுட்டான பொண்ணுமாதிரி சீறும். பயப்புடாதீங்க. இப்ப நம்ம ஐட்டங்கள, அதாங்க சொந்த 

பந்தங்கள உள்ள தள்ளுங்க. கொஞ்சம் தண்ணி (ஐயோ, நீங்க தப்பாவே யோசிக்கிறீங்க, 

இது அதில்ல) காட்டலாம். மொளகாப்பொடி,உப்பு மேல சொன்ன மாதிரி சேத்துக்கங்க. 

மசாலாத்தூள் சேத்தா கொஞ்சம் வாசனை வரும். ரொம்ப பொங்க வச்சிராதீங்க, வேற 

வாசனை வந்திரும். (ஃபயர் சர்வீஸ் காரய்ங்க வந்திடப்போறாங்க.) இப்ப அந்த முட்டை 

மிக்ஸ கலந்து கிண்டுங்க. 2 நிமஷத்துல சாசேஜ் முட்டை கொத்சு தயார்.


பின் குறிப்பு : 

இதை உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்களுக்குக் கொடுத்து ட்ரையல் பாக்கலாம். 

முக்கியமா ஒண்ண மறந்திடாதீங்க. இத செஞ்சது உங்க வூட்டுக்காரம்மான்னு 

சொல்லிடுங்க. எல்லாரும் நல்லாருக்குன்னு கண்டிப்பாத் தலையாட்டிடுவாங்க !

Sunday, February 3, 2013

சுமை


                        
எட்டுப் பொண்ணுங்க, எட்டும்பொண்ணுங்க
பையன் வரம்வேண்டி எங்காத்தா, சுத்தாத கோவில் இல்ல.
பாவி அவ, அந்த சாமி கண்ணு தெரக்கலியே.
இடுப்புல ஒண்ணு,வயத்துல ஒண்ணு,தூளில ஒண்ணு,
துணியில்லாம ஒண்ணுன்னு வீடெல்லாம் பொண்ணுங்க.
அப்பனுக்கு ஓயாத வயல் வேல, உழுவதற்கு
பகலில வயக்காடு, இரவுல என்னப் பெத்த ஆத்தா.
சொந்தத்தில மாமனும், மச்சினனும், டைவரும், டெய்லரும்
ஒவ்வொண்ணாக் கரயேத்தியும் மிஞ்சுனது
பெரியவ நான் கிருஷ்ணவேணி,
சின்னவ ஜோதி.

** ஓவியத்தில் உள்ள சகோதரிகளுக்கும் இக்கதைக்கும்  எந்தவொரு சம்பந்தமுமில்லை