சில
துணைவியரைப் போன்று.
சுயசிந்தனையின்றி
கொண்டோனின் எண்ணங்களை
மட்டும்
பிரதிபலிப்பதால்.
அதனால்தான்
ஆணாதிக்க சமூகம் நிலவை ஆராதிக்கிறது.
சூரியனாய்
என்றாவது சுட்டெரித்தால்
பொறுக்க
மாட்டாமல்
கடுஞ்சொல்லாலும்,
கைகலப்பாலும்
தம்
கட்டுக்குள் வைக்கப் பிரயத்தனம் செய்யும்.
மீறினால்
சமுதாயச் சீரழிவென்று கொக்கரித்து
தம்
தோல்வியை தடம்மாற்றும்.
பெண்
தெய்வம் சகலத்தையும் கல் மனதுடன்
தாங்கிக்
கொள்ளப் படைக்கப்பட்ட ஜென்மமா?
ஓ,
அதுதான் உண்மையான ஜென் நிலை போலும்.
- நிலா - தோஹா – 9 டிசம்பர் 2017