Wednesday, December 31, 2014

நான் பார்த்து ரசித்த படங்கள் - 2014



ரிடர்ன் ஆஃப் பசங்க


பார்வையில்லாக் காதல்


காரின்மேல் கொண்ட காதல்



உதயநிதியின் காதல்


துப்பறியும் த்ரில்லர்



ஜாலியான ஆள்கடத்தல்




ரௌடிகளின் ராஜ்ஜியம்



முரட்டுக் காதல்



சமையலால் மையல்




ஏமாற்றாதே ஏமாறாதே




மருந்து கடத்தல் மற்றும் காதல்




மூடநம்பிக்கைக் கிராமத்தில் காதல்




பேய் மாளிகையில் நடக்கும் வேடிக்கை வினோதங்கள்




வடசென்னையின் இன்னொரு பரிமாணம்




கலக்கல் கார்கடத்தல் + காதல்




நம் மனம் கவர் ஆட்டம்




கதையில்லாத படம்




கண்டதும் காதல்




பேயுடன் காதல்

Wednesday, December 24, 2014

கே பாலச்சந்தர் அவர்களுக்கு அஞ்சலி

அப்ப எனக்கு  ஒரு 7 வயசிருக்கும். புன்னகை என்று ஒரு படம் பார்க்கக் கூட்டிட்டுப் போனாங்க. ஜெமினி கணேசன் - ஜெயந்தி ஜோடி. அதுவரை எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களையே பார்த்திருந்த எனக்கு இது ஒரு புது அனுபவம். ஆனா, படம் வித்தியாசமா இருந்துச்சு. அதே படத்த கொஞ்ச நாளைக்கு முன்னே யூ ட்யூபில் மறுபடியும் பார்க்கக் கிடைத்தது. அன்றைக்கு ஏற்பட்ட அதே பிரமிப்பு துளியும் மாறல்ல. உண்மையிலேயே காலத்தை வென்ற படைப்புன்னு சொல்லலாம். அதன் இயக்குனர் திரையுலகின் ஜாம்பவான் கே.பாலச்சந்தர்.  அந்தக் காலக்கட்டத்துல வந்த இரு கோடுகள், வெள்ளி விழா, காவியத்தலைவி, நூற்றுக்கு நூறு என்று எல்லாமே வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து வந்த அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வராகங்கள், மூன்று முடிச்சு என எல்லாப் படத்தையுமே நான் தவறாமல் பார்த்தேன். பிரமிப்பு கூடியது. கருப்பு வெள்ளைப் படங்களிலே காவியங்கள் படைத்திருந்தார். விடலைப்பருவத்தை எட்டிய தருணம் , எங்கே நம்மை உள்ளே விட மாட்டார்களோ என்ற பயத்துடன் படம் பார்க்கச் சென்று, உள்ளே நுழைந்தவுடன் பெருமூக்சு விட்ட படம் மன்மதலீலை! சில நாட்களுக்கு முன்னர் பார்த்தபோதும் கொஞ்சமும் அலுப்புத் தட்டல்ல. இதைத் தொடர்ந்து வந்த நினைத்தாலே இனிக்கும் பெயரைப்போலவே தித்திப்புக்கு பஞ்சமில்லாத் தேனிசை மழை. கல்லூரி நாட்களில் சிந்துபைரவி மற்றும் புன்னகை மன்னன், இன்றும் நண்பர்கள் கூடும்போது சிலாகிக்கப்படும் படைப்புகள்.  விழுந்து விழுந்து சிரிக்க வைத்த தில்லுமுல்லு காமெடிக்கு ஒரு மைல்கல். பிற்காலத்தில் வந்த புதுப்புது அர்த்தங்கள், உன்னால் முடியும் தம்பி, அழகன், ஜாதிமல்லி என்று எல்லாமே சமுதாயத்துக்கு ஏதாவது ஒரு நல்ல மெசேஜ் சொல்லிச்சு. விரக்தியடைந்த வாலிபர்களை நல்வழிப்படுத்த வானமே எல்லை படத்தைக் காட்டினாப் போதும், வேறு எந்த கவுன்சிலிங்கும் தேவைப்படாது.  பார்த்தாலே பரவசம் படத்திலயும் அவர் டச் பளிச்சிட்டது. சின்னத்திரையிலும் அவர் சோடை போயிடல்ல. ரயில் சினேகமும், கையளவு மனசும் காலத்தால் அழியாப் படைப்புகள்.

நீர்க்குமிழி மறைந்தது.

அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.