Thursday, January 24, 2013

மாநகரப் பேரூந்து


எத்தனையோ வசவுகளும்

எண்ணற்ற சிணுங்கல்களும்

குபீர்ச் சிரிப்புகளும்

குழந்தைகளின் கும்மாளமும்

இளசுகளின் கண்ணீரும்

பெருசுகளின் பெருமூச்சும்

எல்லாத்தையும் (தன்)னுள் வாங்கி

அமைதியாய் நிற்கிறது ஒரு ஓரமாய்

மக்கள் அழுக்காக்கிப்போன

மாநகரப் பேரூந்து !

No comments:

Post a Comment