எத்தனையோ வசவுகளும்
எண்ணற்ற சிணுங்கல்களும்
குபீர்ச் சிரிப்புகளும்
குழந்தைகளின் கும்மாளமும்
இளசுகளின் கண்ணீரும்
பெருசுகளின் பெருமூச்சும்
எல்லாத்தையும் (தன்)னுள் வாங்கி
அமைதியாய் நிற்கிறது ஒரு ஓரமாய்
மக்கள் அழுக்காக்கிப்போன
மாநகரப் பேரூந்து !
No comments:
Post a Comment