Monday, November 24, 2014

கல்யாணமே வைபோகமே

இன்னைக்கு ராம்லிக்கும் ஹேமாவுக்கும் கண்ணாலமாகி 21 வருஷம் பூர்த்தியாகுது. காலேஜ்ல படிக்கும்போது ராம்லியின் பாட்டுக்குக் கிடைத்த ரசிகைதான் ஹேமா, எங்களுக்கு 3 வருடம் ஜூனியர். நாங்க ஏன் பாடல்லன்னு பேச்சு வரலாம். கதவு பூட்டியிருக்கு என்னும் ஒரே தைரியத்தில் பாத்ரூமில் மட்டுமே குரல் கொடுத்த சமூகம் எங்களது. பிரசாத் ட்ரம்ஸ் வாசிப்பான். சத்யா தபேலா வாசிப்பான். நாங்க நாலஞ்சு பேரு இவனுங்ககூட போய் உட்கார்ந்து பாட்டு மட்டும் கேட்போம். எங்கள் கல்லூரியின் ஆஸ்தான பாடகன் ராம்லி. ஆர்.ஈ.சீ ஃபெஸ்டெம்பர் மேடையில் அசத்தலாப் பாடினான், ஆனா, பரிசு ஏதோ ஒரு சென்னைக் கல்லூரிப் பையனுக்குப் போயிடிச்சு. அப்புறம் மூகாம்பிகை காலேஜ் மேடையில் அசத்தினான். அங்கேயும் பரிசு கை நழுவிப் போச்சு. எது எப்படியோ, அவன் குரல் ஒரு ரசிகையை அவனுக்குக் குடுத்துச்சு. பல போராட்டங்களுக்குப் பிறகு , திருப்பதியில் நண்பர்கள் புடைசூழ ஹேமாவைக் கைபிடித்தான். ஷ்ருதி எனும் அழகிய பெண் குழந்தை இப்பொழுது எங்கள் கல்லூரியிலேயே இரண்டாம் ஆண்டு பயில்கிறது. நட்புக்கு இலக்கணமான நல்ல நண்பனாக மட்டுமன்றி நல்ல மகனாகவும் இருக்கிறான் ; இருவர் பெற்றோரும் இவர்களுடனேயே வசிக்கிறார்கள்.  நீடூழி வாழ்க பல்லாண்டு. 

No comments:

Post a Comment