Tuesday, January 23, 2018

விளக்கு


விளக்குக்கு திரி முக்கியம். 

எரிபொருளும் முக்கியம். 

அதைவிட முக்கியம் பிராணவாயு. 

மூன்றும் அளவாகக் கிடைக்கும் விளக்கு பிரகாசமாக ஒளிவிடும். 

ஆனால் நடைமுறையில் அப்படி அமைவதில்லை. 

சில சமயங்களில் மூன்றும் இருந்தும் விளக்கு ஓட்டையாயிருந்தால் அவ்வளவும் பாழ். 

சில சுடர்கள் சுவாசிக்க முடியாமல் தள்ளாடித், திண்டாடிக் கடைசியில் உயிரை விடவும் செய்யும். 

அணையும் போது மட்டும் பிரகாசமாய் எரியும் சுடர்களும் ஆங்காங்கே இல்லாமல் இல்லை. 

மொத்தத்தில் விளக்கின் நோக்கம் வெளிச்சமூட்டுவது என்பதை மறந்து போனால் அந்த விளக்கால் யாருக்கும் லாபமில்லை. 

No comments:

Post a Comment