பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்லும் வாயாலேயே மாயப் பிசாசுகள் என்றும் சொல்லித் திரிவது?
சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று குரூரமாக சொல்வது?
பொம்பளை சிரிச்சாப் போச்சு புகையில விரிச்சாப் போச்சுன்னு சொல்லி சிரிப்பது?
உன்னைப் பெற்றவள்
அவளுக்குப் பிறந்தவள்
உனக்குப் பிறந்தவள்
அவளைப் பெற்றவள்
அனைவரும் பெண்கள் ?
வாழ்வின் எல்லாக் காலகட்டத்திலும்
ஆணுக்குப் பெண் துணை
அத்தியாவசியம்?
இருந்த போதிலும் காழ்ப்புணர்ச்சி?
ஒரு வேளை காமத்தின் விரக்தி
களிவிரக்கமாய் ?
No comments:
Post a Comment