செய்முறை விளக்கம்
புளி கொஞ்சம் எடுத்து நல்லா கரைக்கோணும். தக்காளி,வெங்காயம்,பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் ஐட்டங்கள அளவா வெட்டி ரெடி பண்ணிக்கோங்க. மஞ்சள் தூள், மிளகாத்தூள், மீன் மசாலாத்தூள்,உப்பு எல்லாத்தையும் ரெடியா வச்சுக்கோங்க. முக்கியமா கடுகு, உளுத்தம்பருப்பு.
அடுப்ப பத்த வச்சு கடாயை அதில சூடு பண்ணுங்க. எண்ண அளவா விட்டு, கொதி லைட்டாக் கிளம்பினோன்னே கடுகு/உளுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க. அப்படியே வெட்டி வச்ச ஐட்டத்தயெல்லாம் உள்ள தள்ளுங்க.
இப்ப டின்ல உள்ள மீன லாவகமா அந்த கொதிக்குற மிக்ஸ்ல போடுங்க. கவனம், மீன் ஒடஞ்சிடாம.
இப்ப அந்த புளி கரைசல எடுத்து அதில ஊத்துங்க. கொஞ்சம் கொதிக்க விடுங்க.
மிளகாத்தூள், மஞ்சள் தூள், மசாலா,உப்பு எல்லாம் அளவா சேத்துக்கோங்க.
இப்ப மூடி வச்சுட்டு, அடுப்ப ஸிம்மில வையுங்க.
கொஞ்ச நேரத்தில ரெடியாயிடும்.
ரொட்டி, சாதம் எதுக்கு வேணும்னாலும் தொட்டுக்கலாம்.
பின் குறிப்பு :
இந்த ஷ்ரேயா கோஷல் பாட்டக் கேளுங்க. மொழி புரிஞ்சாலும், புரியாட்டியும் உள்ள என்னமோ பண்ணும்…..
No comments:
Post a Comment