முன்னுரை
போன
வாரம் நம்ம ரெசிப்பிக்கு மிகப் பெரிய ஆதரவளித்த அனைவர்க்கும் ரொம்ப நன்றி.
எப்படிச் செய்வது?
இன்னைக்கு
கோழிக்கறி உருண்டைப் பிரட்டல். இதுக்கு கடைகளில் கிடைக்கும் சிக்கன்
மீட் பால்ஸ் வாங்கி
நல்லா குளிர் போகும்வரை ஆறவிடுங்க. வழக்கம் போல தக்காளி,
வெங்காயம், பச்ச மொளகா, பூண்டு,
கறிவேப்பிலை ஐட்டங்களை எடுத்து ஒழுங்கு
மரியாதையா கழுவி,அளவா வெட்டிக்கோங்க. அந்த மீட்
பால்ஸ் பெருசாயிருந்தா துண்டு
துண்டா வெட்டிக்கலாம். அடுப்ப பத்த வச்சு கடாய அதில வையுங்க.
கொஞ்சமா எண்ணை
ஊத்தி இதமான சூடு வரும்போது கடுகு, உழுந்து போட்டுத் தாளிச்சுக்கோங்க.
இதில
தக்காளி இத்யாதி ஐட்டங்களைப் போடுங்க. அப்படியே அந்த கோழி உருண்டைகளையும்
சேத்துக்கோங்க.
தண்ணி அளவா காட்டோணும். இத கொஞ்சம் கொதிக்க வுடுங்க. கொஞ்ச
நேரம் போனதும் சிக்கன் மசாலத்தூள்
மற்றும் சிக்கன் சூப் க்யூப் தூள் இத்துடன்
சேர்த்துடுங்க. பதமாப் பாத்து இறக்கிடுங்க.
கண்டுபிடிப்பு :
சமைக்கும்போது
பாட்டுக் கேட்பது சுவாரசியம். 5 பாட்டு கேட்பதுக்குள்ள சமையல் முடிஞ்சிடும்.
நான்
சிபாரிசு பண்ணும் 5 பாட்டு (ராஜா ஹிட்ஸ் 1982) :
1. ஓ நெஞ்சமே - எனக்காகக் காத்திரு - ஜானகி/தீபன் சக்கரவர்த்தி
2. இளம் பனித்துளி விழும் - ஆராதனை - ஜென்சி
3. பூ வாடைக்காற்று - கோபுரங்கள் சாய்வதில்லை - ஜானகி/கிருஷ்ணசந்தர்
4. காலங்கள் மழைக்காலங்கள் - இதயத்தில் ஓர் இடம் - ஜானகி/மலேசியா வாசுதேவன்
5. காலை நேரக்காற்றே - பகவதிபுரம் ரயில்வேகேட்- சைலஜா/தீபன் சக்கரவர்த்தி
பின் குறிப்பு :
போன வாரம் பின் குறிப்பப் பாத்து வீட்டுக்காரம்மா சண்டை போடாத
குறை, என்ன இருந்தாலும் அவங்க அளவுக்கு நம்ம சமையல் வராது. ஆனா, சீக்கிரம் வரும். நம்பிக்கைதாங்க
வாழ்க்க……
No comments:
Post a Comment