Sunday, December 22, 2013

சுவாரஸ்யமான புகைப்படங்கள்


இந்தப் புகைப்படம் நான் பிறக்க முன் எடுக்கப்பட்டது. எங்க வீட்டுப் பழைய ஆல்பத்திலிருந்து கிடைத்தது. இது ராஜரத்தினம் மாமாவின் குடும்பப் படம். அவர் கொழும்பில் பிரபலமான வக்கீல்.சட்டக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார். சட்டம் படிக்கும்போது காதல் வயப்பட்டுச் சிங்களப்பெண்ணை மணமுடித்தார். அந்தத் திருமண பந்தத்தின்மூலம் 7 குழந்தைகளைப் பெற்ற அவர் மனைவி இறுதிப்பிரசவத்தில் இரண்டை ஈன்று இறையடி சேர்ந்தார். பாவம் குழந்தைகள் ! குழந்தைகளுக்குத் தாய் வேண்டுமென்று வருந்திய தந்தையார், இரண்டாந்தாரமாக மேற்படி படத்தில் இருக்கும் பெண்மணியைக் கை பிடித்தார். அவரும் சில நாட்களிலேயே இறந்து போக மனம் வெதும்பினார். அவ்வேளையில் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவியொருவர் தாமாக முன்வந்து அந்தக் குழந்தைகளுக்குத் தாயாகும் பெரும்பொறுப்பை ஏற்றார். இதற்காக அவர் தனக்கென்று பிள்ளைகள் பெற்றுக்கொள்ளாதது இங்கே குறிப்பிடத்தக்கது. 

பிள்ளைகள் வளர்ந்தனர். தந்தையின் தொழிலையே மாக்களில் நால்வர் விரும்பி ஏற்றனர். தந்தையின் தொழில் சிறப்பாக நடந்தது. அருகில் வசித்த பெண்களையே மூத்த சகோதரர்கள் காதலித்து மணந்தனர். இவர்கள் வழியிலேயே இளைய பெண்ணும் பேனா நண்பரான ஜெர்மனிய நாட்டவரை காதல் மணம் புரிந்தார். இவ்வேளையில் வாசஸ்தலத்தை வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாற்றினர். அதற்கு வங்கிகளின் உதவியை நாடினார் மாமா. சொந்த வீட்டுக் கனவு நனவானது. ஆனால் வாங்கிய கடன் நெருக்கியது. தினம் நடைப்பயிற்சிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தவர், மனவழுத்தம் தந்த கவனப்பிசகால் ரயில் தண்டவாளத்தைக் கடக்கையில் துர்மரணமடைந்தார். பெரிய விருச்சம் வீழ்ந்தது. இது என் தந்தைக்குப் பேரிழப்பென்றால் மிகையாகாது. பிள்ளைகள் வங்கிக்கடனை ஒருவாறு ஒழித்தனர். மற்றவர்களுக்கும் திருமணம் நடந்தேறியது. அவர்களுக்கும் பிள்ளைகள் பிறந்து, அவர்களும் வளர்ந்து பெரியவராயினர். அந்த அத்தை இன்னும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். அவர் தியாகத்தை பற்றி பேச யாரும் இல்லாது போனதுதான் சோகம். 

2 comments:

  1. ஒரு புகைப் படம் கதை சொல்லுகிறது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete