சம்பிரதாயமான நலன் விசாரிப்புகள்
கண்களால் உருவத்தையும் உடையையும்
கண்களால் உருவத்தையும் உடையையும்
எடை போடும் படலம்
இறுதியாக உங்களுக்கு எவ்வளவு சம்பளம்
மனதை அரிக்கும் கேள்வி.
பதில்
என்னவாக இருந்தாலும்
எப்படி?
கஷ்டமா இல்லையா?
என்று
தன்னிலையை ஸ்திரப்படுத்த
ஒரு
கேள்வியும் அத்தோடு ஒரு
இழிவான
சிரிப்பு.
இங்கிதம்
என்னும் வஸ்து
எவ்வளவு
பணம் இருந்தாலும்
இந்தக்
கூட்டத்துக்கு
மருந்துக்குக்
கூட இல்லை என்பதை
எண்ணி
நான் நகைப்பதை
தான்
கேட்ட அறிவு பூர்வமான
கேள்வியால்
நிலை குலைந்து
நான்
சரணாகதியாகிய நிலை
என்று
எண்ணும் அற்பப் பதர்கள்.
ஒரு
போது ஆணிடம் வருவாயையும்
பெண்ணிடம்
வயதையும் கேட்கக் கூடாதென்பது
அடிப்படை
நாகரீகம்.
இது
பள்ளி சென்றிருந்தால்தானே
படித்திருக்க
முடியும்?
-
இங்கிதம் - தோஹா
- 2 நவம்பர் 2017
No comments:
Post a Comment