Thursday, November 2, 2017

மழலையின் பரோபகாரம்

அப்பாவையும் காணோம்
அம்மாவையும் காணோம்
பயத்துல அழுதிட்டேன்
யாரோ தொட்டில ஆட்டி விட்டாங்க
எனக்குப் பசிக்குது
சாப்பிடாம நான் எப்படித் தூங்கிறது?
எவ்வளவு நேரம்தான் அழுகிறதுன்னுட்டு
வெளிய எட்டிப் பார்த்தேன்
தூரத்தில அம்மா செங்கல் சுமந்திட்டுப் போகுது
அம்மான்னு கூப்பிட்டேன்
என்னா கண்ணுன்னு ஓடி வந்திச்சு
வந்து என்னத் தூக்கி
உச்சி மோர்ந்திச்சு
அம்மா பசிக்குதம்மான்னேன்
கொஞ்சம் பொறுத்துக்க செல்லம்
அடுப்புல உல கொதிக்குது
இன்னும் கொஞ்ச நேரத்துல
உனக்கு சுட சுட சோறு போடறேன்
அது வரைக்கும் இந்த மாங்காயைத் தின்னு
அப்படின்னுட்டுப் போய்ருச்சு
நான் மாங்கா சாப்பிடுறேன்
உங்களுக்கும் வேணுமா?


-          மழலையின் பரோபகாரம்  - தோஹா – 25 செப் 2017

2 comments:

  1. பசியாற மாங்காயாவது கிடைத்ததே

    ReplyDelete
    Replies
    1. அதையும் பகிர நினைக்கும் மனது?

      Delete