Thursday, November 2, 2017

நடைபாதை வாழ்க்கைகள்

காலைக் கருக்கலில கடை தொறந்தா அந்தி சாயும் நேரம் வரைக்கும் வேலை சரியாயிருக்கும்.
கூட மாட ஒத்தாசைக்கு பொண்டாட்டிதான், தேய்ச்ச துணியக் குடுக்க பள்ளி விட்டு வர்ற பையனும் பொண்ணும்.
ஏதோ தெருவிளக்கு வெளிச்சத்தில சில மணி நேரம் கூடுதலாத் தேய்க்க முடியுது.
மழ வந்தாக் கஷ்டம், யாராச்சும் அவுங்க கார் ஷெட்டை குடுத்தா பொழப்பு ஓடும்.
அதுலையும் கரி போட்டு எரிக்குறதுக்கு ஒத்துக்க மாட்டாங்க.
கரண்டுல போட்டுத் தேய்க்கலாமேன்னு சொல்லுவாங்க.
வர்றது வாய்க்கும் வயுத்துக்குமே சரியா இருக்கையில கரண்டு அயர்ன் வாங்க நான் எங்க போக.
பேங்குல லோன் கேளுன்னு ஒருத்தர் சொன்னாரு.
ஐயா, நீங்க சொல்லி வாங்கிக் கொடுக்கிறீங்களான்னோன்னே, துணிய வாங்கிட்டு சத்தமில்லாமப் போய்ட்டாரு.
தேய்ச்சுக் கொடுக்கிற எங்களுக்குப் பழைய துணியெல்லாம் கொண்டாந்து கொடுத்து அழகு பார்க்கிற கூட்டமும் இருக்கு.
குடுக்கிற அஞ்சு, பத்துக்கு என்னென்னமோ கேக்க வேண்டியிருக்கு.
என்னோட இந்தப் பொழப்பு ஒழிஞ்சிடனும்.
புள்ளைங்களை கான்வென்ட்ல படிக்க வச்சிருக்கேன்.
துணி குடுக்கிற ஆளுக்கிட்ட இங்கிலீஷ்ல பேசுறப்ப எம் மனசு துள்ளிக் குதிக்குது.
கண்டிப்பா வாழ்க்கை இனிக்கத்தான் போகுது. பார்த்துக்கிட்டே இருங்க!


-          நடைபாதை வாழ்க்கைகள் - தோஹா - 8 ஏப்ரல் 2017

2 comments:

  1. ஏதேதோ நம்பிக்கையில்தான் வாழ்க்கை ஓடுகிறது

    ReplyDelete
  2. நம்பிக்கையே வாழ்க்கை.

    ReplyDelete