சொல்லிப்புட்டா மகராசி
உன்னைய
விட உன் நீட்ட முடிதான் தாயி
எனக்குப்
புடிச்சிருக்குன்னு!
அன்னிக்கே
அன்னியமாப் போனா
பிறகு
ஒட்டவேயில்ல!
புருசனுக்கு
சீக்கு வர நான் காரணமில்ல
ஆனா,
பொண்ணாப் பொறந்த பாவத்துக்கு
எல்லாமே என் தலையில!
மாமியார்
நேர்ந்துக்கிறேன்னு
சொன்னது என் முடிய
அப்படி
என்னதான் பொறாமையோ ?
பார்த்துப்
பார்த்து செஞ்சாலும்
வெடுக்கின்னு
ரெண்டு வார்த்த சொல்லாட்டி
சோறும்
செரிக்காது
இவ
புடுங்கல் தாங்காமப் புருசனும் போய்
ஆச்சு
இப்ப பல நாளு
ஆசை
ஆசையா வளர்த்த கூந்தல்
அம்புட்டையும்
அள்ளிக் குடுத்தாச்சு
கடங்காரி
முகத்துல என்ன ஒரு சந்தோசம்
எனக்கில்லாதது
ஒனக்கு மட்டும் எப்படி?
இப்ப
அள்ளிக் குடிக்க இந்த ஆத்துத் தண்ணிதான்
நமக்கு
மிஞ்சிச்சு!
-
பெண்ணடிமைத்தனம் – தோஹா
– 18 செப் 2017
என் வலைத்தளத்தில் எதிரும் புதிரும் பதிவில் இருந்த காணொளி பார்த்தீர்களா
ReplyDeleteஇல்லை ஐயா, சில நாட்களாக பணிச்சுமை, தற்சமயம் சற்று தளர்ந்த நிலை. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
Delete