கிடைக்கும்போது
பசிப்பதில்லை
ருசித்துப்
புசிவதில் பசியின் எல்லை
எங்கெங்கோ
சஞ்சரிக்கும்
புசித்தபின்
பசித்தவன் புலன்கள் அடங்க
பள்ளி
கொண்டால் பேரானந்தம்
இன்று
புசிப்பது பசிக்காக அன்றில்
ருசிக்காக
அல்ல என்றாகி
வீட்டில்
கிடைக்காததை வெளியில் தின்று
வீட்டில்
உண்ணாததை வெளியாள் தின்று
இனங்காணா
நோய்கள் எத்தனையோ
பிறழ்வுகள்
பிரளயங்கள்
கடைசியில்
விரக்தியால் விபரீதங்கள்
வீட்டில்
உண்பீர்! வெளியில் வேண்டாம்!!
மனம்
உடல் வளம் பெறும்!
-
தினசரி அலம்பல்கள் – தோஹா
– 19 செப் 2017
என்ன ஆயிற்று வலைத்தளத்தை மறந்திருந்த நீங்கள் ஒரேயடியாக ஆதங்கப் பதிவுகளாகவே வெளியிடுகிறீர்களே
ReplyDeleteசமயம் கிடைக்கும்போது எழுதியது, பல நண்பர்கள் ஆக்கங்களைப் பார்வையிட விருப்பம் தெரிவித்தமையால் ஒட்டுமொத்தமாய்ப் பதிவிட்டேன் ஐயா.
ReplyDelete