08 : 33
இறங்குவோர்
நெருக்கியடித்துக் கொண்டு இறங்கினார்கள். அதேயளவு கூட்டம் திரும்பவும் ஏறியது.
ரயிலில்
கூட்டம் குறைந்தபாடில்லை.
ராஜாபாதருக்கு
ஏன் ரயிலில் வந்தோமென்று இருந்தது. பேசாமல் வண்டியிலேயே போயிருக்கலாமென்று தோன்றியது.
நியாசுக்கு
ஃபோன் போட்டான்.
‘நீ சொன்னேன்னு ரயில்ல வர்றேன் பாரு, என் புத்தியச்
சொல்லணும்’
‘------‘
‘என்ன, ஒரு மாதிரியாப் பேசுற? ஒடம்புக்கு ஏதும்
சரியில்லையா?’
‘-------‘
‘பொருள் எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு. நான்
கவனமாத்தான் இருக்கேன்’
‘------‘
‘’சரி,சரி நான் இன்னும் பத்து, பதினஞ்சு நிமிஷத்துல
ரீச் ஆகிடுவேன்’
நிமிர்ந்து
பார்த்தவன் ஒரு நிமிஷம் அதிர்ந்து போனான். யாரோ ஒருவன் இவனையே முறைச்சுப் பார்த்துக்
கொண்டிருந்தான். அவன் தோரணையில் போலீஸ் வாடை அடித்தது. என்னமோ ஒரு சம்பவம் நடக்கப்
போவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரியவர் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.
‘ஏமாற்றாதே ஏமாற்றாதே, ஏமாறாதே ஏமாறாதே’
சந்தோஷ்
திறந்து மூடிய ஸ்ரீகுமாரின் அந்தப் பையினுள்ளே ஒரு பிரபலமான இனிப்பகத்தின் இலச்சினை
பொருந்திய உறைகளைக் கண்டார். இவ்வளவு உறைகளை இவன் ஏன் மெனக்கெட்டு இந்த ரயிலில் எடுத்துச்
செல்கிறான் என்ற கேள்வி எழுந்தது. அந்த இனிப்பகத்துக்குச் சென்னைப் பெருநகரிலேயே பதினைந்து
கிளைகள் இருந்தன. அப்படியிருக்கையில் எதற்கு இதனை ரயிலில் சுமக்கிறான் என்ற ஐயம் எழுந்தது.
ஒருவேளை இவன் அந்த உறைகளை சப்ளை செய்பவனாக இருக்கலாம் என்று எண்ணினான். மீண்டும் அவனை
நன்கு நோட்டம் விட்டான். ஆள் பார்க்க நன்றாகவே இருந்தான். ரேபான் கண்ணாடி, கேசியோ ஸ்போர்ட்ஸ்
வாட்ச், தங்க பிரேஸ்லட், நைக்கி ஷூ, ஐ ஃபோன் எல்லாம் அவனை மேல்மட்டத்து ஆளென்று பறைசாற்றியது.
என்னமோ ஒன்று சரியில்லையென்று மனதுக்குப் பட்டது. உடனே மனதில் அம்மாவை நினைத்தார்.
எப்போதெல்லாம் மனதில் கலக்கம் ஏற்படுமோ அப்போதெல்லாம் இவ்வாறு செய்வது இவன் வழக்கம்.
அவ்வேளைகளில் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். இன்றும் அவ்வாறான தெளிவு பிறந்தது.
தனது
அலைபேசியில் ஒரு குறுந்தகவலை அனுப்பினார்.
பதில்
வந்தது.
மீண்டும்
ஒரு தகவலை அனுப்பி விட்டுக் காத்திருந்தார்.
ரயில்
வேகமாக ரயில் நிலையத்தில் நுழைந்தது
(தொடரும்)
No comments:
Post a Comment