08 : 36
செபஸ்டின்
வண்டியிலிருந்து சட்டென்று இறங்கினான். அதே வேகத்துடன் ஓடிச் சென்று சந்தோஷ் குறிப்பிட்ட
பெட்டியில் ஏறினான்.
இவனைக்
கண்டதும் சந்தோஷ் வேகமாக ஸ்ரீகுமாரின் அருகில் சென்றான்.
‘ஹலோ மிஸ்டர், உங்க பைய கொஞ்சம் செக் பண்ணனும்’
ஸ்ரீகுமார்
மிரண்டான். ஆனாலும், தைரியமாக எதிர்க் கேள்வி கேட்டான்.
‘ஞிங்கள் ஆராக்கும், எண்டே சாமான சோதிக்க?’
சந்தோஷ்
ஆங்கிலத்துக்கு மாறி, தன்னை அடையாளப்படுத்திக் கொண்டான்.
தன்னை
ஒரு தமிழன் அப்படிச் செய்வதை ஸ்ரீகுமார் விரும்பவில்லை. தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்
என்னமோ உளறினான். அதற்குள் சந்தோஷ் நெருங்கி பையில் கையை வை…க்…க முயல……..
‘நகருடா பட்டி’
ஸ்ரீகுமாரிடமிருந்து
வந்த சொல்லின் அர்த்தம் என்னவென்று சந்தோஷுக்குத் தெரிந்திருந்தது அவன் தூரதிர்ஷ்டம்.
பளாரென்று ஒரு அறை விழுந்ததில் அவன் பொறி கலங்கிப் போனான். எழுந்தவன் ஒரே அமுக்காக
அமுக்கப்பட்டான். அதற்குள் செபஸ்டியனும் வந்து விட இருவரும் சேர்ந்து அவனை இழுத்துக்
கொண்டு வெளியேறினார்கள். கூடவே அந்தப் பையையும் எடுத்துக் கொண்டார்கள்.
அருகில்
இருந்த ஒருத்தனை எதுக்கு இழுத்துக் கொண்டு போகிறார்கள் என்று பெட்டியில் இருந்த எல்லோரும்
சலசலத்தார்கள். அந்த இடத்தைப் பிடிக்க முண்டியடித்தார்கள். இடம் கிடைத்தவர் அருகில்
இருந்தவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டார். என்னங்க பிரச்சினன்னு கேட்டு, நமக்கேன்
பொல்லாப்பு என்று கையை விரித்தார்.
எதிர்
சீட்டில் இருந்த திராவிடன் சீட்டுக்கு அடியில் என்னமோ இருப்பதைக் கண்டார். இழுத்துக்
கொண்டு செல்லப்பட்டவன் ஏதோ சட்ட விரோதச் செயலில் ஈடுபட்டவன் போலும், அதுதான் மஃப்டியில்
உள்ள காவலர்கள் அவனை வசமாகப் பிடித்து விட்டார்கள் என்று தோன்றியது. அது என்ன பொருளாக
இருக்கும் என்று யோசிக்கலானார்.
அதையே
அருகிலிருந்த ஒருவனும் கவனிப்பது அவருக்குத் தெரியவில்லை. அவன் இவரைப் போலல்லாமல் பொருளைக்
கபளீகரம் செய்யும் நோக்கிலேயே அதனைப் பார்த்தான். அந்த சீட்டில் உள்ளவர் எழுந்தவுடன்
தானும் நகர்ந்து அந்த இருக்கையைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டான் சுப்பு. அது தோல்வியில்
முடியவே தனது பார்வை அந்தப் பொதிமேல் படும் தூரத்தில் நின்று கொண்டான். அடுத்து நம்ம
ஏரியா, அங்க இதை எப்படியும் லவட்டிடலாம்னு அவன் மனதில் பட்டது.
சந்தோஷும்,
செபஸ்டீனும் ஸ்ரீகுமாரை முறையாகக் கவனிக்கக் கொண்டு போகுமுன் மற்ற மூவருக்கும் தகவல்
அனுப்பி விட்டார்கள். குணா உடனே ஓடி வந்து அந்தப் பெட்டியில் ஏறிக் கொண்டான்.
ரயில்
கிளம்பியது.
(தொடரும்)
No comments:
Post a Comment