Saturday, February 27, 2016

அப்பா வருவாரா? - 6

அத்தியாயம் - ஆறு 

உள்ளே நுழைந்தான்.

குழந்தை எங்கேயென்று கையால் சைகை பண்ணினான்.

தூங்கி விட்டானென்று சைகையில் பதில் கிடைத்தது.

ஹாலில் உள்ள சோஃபாவில் அமர்ந்தான்.

எதிரில் மாளவிகா.

நைட்டி ஹவுஸ்கோட் சகிதம் இன்றுதான் அவளைப் பார்த்தான்.

கண்களில் சஞ்சலம் தெரிந்தது. மற்றப் பிரதேசங்கள் வெறியேத்தின.

பொறுமை மகனே என தன் சிந்தனைகளை அடக்கினான்.

‘சொல்லுங்க, எதாயிருந்தாலும் பரவாயில்ல. மனசில உள்ளத வெளியே கொட்டுனா, மனசு கொஞ்சம் அமைதியடையும்’

மௌனம்.

‘முதல்ல என்ன நீங்க,வாங்கன்னு கூப்பிடுறத நிறுத்துங்க, எனக்கும் கிட்டத்தட்ட உங்க வயசுதான்’

புன்னகைத்தான்.

‘சரி, மாளு மேல சொல்லு. என்னையும் பேர் சொல்லியே கூப்பிடலாம்.தப்பில்ல’

பெரு விரலைத் தூக்கி தம்ஸ் அப் சொன்னாள். தொடர்ந்தாள்.

‘தப்பு பண்ணிட்டனோன்னு தோணுது ஷங்கர். மகா ரொம்ப உத்தமன்னு நெனச்சு ஏமாந்திட்டேன். நம்ப வச்சுக் கழுத்தறுத்திட்டான்’

மௌனம்.

‘அது எப்படி தனக்கு வர பொண்டாட்டி மட்டும் வர்ஜினா இருக்கணுமின்னு எதிர்பார்க்கிற ஆம்பளைங்க தங்க ஒழுக்கம்பத்தி அலட்டிகிறதேயில்ல?’

தலையசைப்பு.

‘பொண்ணுங்க நெனச்சா என்ன வேணும்னாலும் பண்ணலாம், எவ்வளவு நாள்தான் நாங்க பொறுமையா இருக்கிறது?’

மௌனம்.

சம்மந்தா சம்மந்தாமில்லாமல் வசனங்கள் வெளிப்பட்டன. கோவம் குறையக் காத்திருந்தான்.

அடுத்தகட்டமான சுயபச்சாதாபத்திற்கு மாளுவின் மூட் மாறியது.

கண்ணீர் பெண்களின் மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அதை மிகவும் லாவகமாகத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த மிகச் சில ஆண்களுக்கே தெரிந்திருந்தது.

ஷங்கர் எழுந்தான்.

மெதுவாக மாளுவின் அருகில் சென்று அமர்ந்தான்.

கையை அவள் தோள்மீது வைத்து அவள் கண் பார்த்துப் பேசினான்.

      ‘முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் மாளு’

அவன் அருகில் அமர்ந்ததோ, தோளில் கை வைத்ததோ தப்பாகவே தோன்றவில்லை அவளுக்கு. மாறாக இது எல்லாமே இயல்பான ஒரு வடிகாலாகவே தோன்றியது.

மௌனம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் பச்சை விளக்கென உணர்ந்தான்.

நூல் நுழைய ஊசி இடம் விட்டது.



(தொடரும்)

No comments:

Post a Comment