விவேகானந்தன் தினத்தந்தி பேப்பரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான். புகழின் படம் போட்டு யாரோ
கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
சென்னை பரபரப்பாகிக் கொண்டிருந்த ஒரு
அதிகாலை வேளையில் தம்மடிக்க வழக்கம் போல அந்தப் பெட்டிக்கடைக்கு வந்தவனை, யாரிடம் பேச
எண்ணியிருந்தானோ அவனின் மரணச் செய்தி உலுக்கியது.
புகழ் சொல்லிப் புகலிடம் கொடுத்த
இருவரும் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகியிருந்தார்கள். ஒரு நாள் ஆஃபீஸ் முடிந்து வீடு
வந்த பொழுது செக்யூரிட்டி இவனிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்தான்.
அன்று வெடிகுண்டு வெடித்து ஊரே களேபரமாகியிருந்த
நாள். தனது வீட்டில் தங்கியிருந்து விட்டு இப்படிக் காணாமல் போனது பற்றி அவன் கலங்கினான்.
ஒரு வேளை குண்டு வெடிப்பில் சிக்கியிருக்கலாமோ என்று யோசித்தான். அறையை முழுவதுமாகச்
சுத்தம் செய்து விட்டுத்தான் போயிருந்தார்கள். இவன் பொருட்கள் எதுவும் தொலைந்த மாதிரித்
தெரியவில்லை.
தற்செயலாகக் குப்பைக் கூடையைப் பார்த்தவன்
கண்ணில் புதிய ஐ ஃபோன் கவர்கள் தென்பட்டன. எண்ணிப் பார்த்தான். மொத்தமாக 6 உறைகள்.
குழப்பத்துடன் போய் டிவியை ஆன் பண்ணினான்.
அனேகமாக எல்லாச் சானல்களிலும் குண்டு
வெடிப்புப் பற்றிய செய்திகள் ஒளிப்பரப்பப் பட்டன.
கமிஷனர் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
நூதன முறையில் பிளாஸ்டிக் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி இந்தச் சதிவேலை நடந்ததாகச் சொன்னார்.
சிசி டிவியில் குண்டு வெடிக்கச் சற்றுமுன்
பதிவான காட்சியொன்று பளிச்சிட்டது. ஒருவன் நாலாபக்கமும் பார்த்தபடி ஒரு ஃபோனை இயக்குவதும்
பெரும் தீப்பிளம்பு கிளம்புவதும், அதைத் தொடர்ந்த அலரல்களும்.
கூர்ந்து நோக்குகையில் அது ஒரு பளபளக்கும்
ஐ ஃபோன் என்று தெரிந்தது. விவேகானந்தனுக்கு அந்த மனிதனின் தோற்றத்துக்கும் தொலைபேசிக்கும் இடையே ஏதோ நெருடியது.
பெரும் தேசத்துரோகத்திற்குத் தானும்
உடந்தையா என்ற சிந்தனை பொறி தட்டியது.
ஏசி போட்டிருந்தாலும் வேர்த்தது.
புகழுக்கு உடனே ஃபோன் போட்டான்.
ஃபோன் எடுக்கப்படவில்லை.
திரும்பித் திரும்பி முயன்றான்.
‘நீங்கள் தொடர்பு கொள்ள
நினைக்கும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார். சற்று நேரம் சென்ற பின்
முயற்சிக்கவும்.’
அன்றிரவு முழுக்கவும் இதே திரும்பத்
திரும்ப ஒலித்தது.
(தொடரும்
No comments:
Post a Comment