Saturday, March 5, 2016

த்ரீ நாட் ஃபைவ் - 4

அத்தியாயம் - நாலு


குட்டி ஸ்வஸ்திகாவுக்கு தலைகால் பிடிபடவில்லை.

காலையில் கண் விழித்துப் பார்த்தால் அவள் அருகில் ஒரு குட்டி பக் அமர்ந்திருந்தது.

மகிழ்ச்சியில் அப்படியே

      ‘மம்மி…………..!’

என்று அலறி விட்டாள்.

என்னமோ ஏதோவென்று ஓடி வந்தாள் ரேவதி.

மகளையும் அருகில் இருக்கும் புது வரவையும் கண்டு இப்பொழுது அவள் அலறினாள்.

      ‘அம்மா………..!’

மகளின் ஓலம் கேட்டு இப்பொழுது காமாட்சி ஓடி வந்தாள். கண்ட காட்சி அவளையுமறியாமல் கதற வைத்தது.

      ‘என்னங்க…………!’

இது அனைத்தையும் தினத்தந்தி படித்துக்கொண்டு கவனித்துக் கொண்டிருந்த ஈஸ்வரன் அவசரமாக உள்ளே நுழைந்தார்.

மகிழ்ச்சியான பேத்தி, மிரண்டு போன மகள், பீதியான மனைவி மற்றும் என்னவென்று தெரியாத ஒரு முகபாவனையுடன் ஒரு குட்டி நாய்.

வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கலானார்.

ரேவதிக்கும் காமாட்சிக்கும் இந்த மனிதன் சிரிப்பது பயங்கர கோபத்தை உண்டு பண்ணியது.

காமாட்சி கதறினாள்.

      ‘ இங்க இப்ப என்ன நடக்குதுன்னு இப்படிச் சிரிக்கிறீரு?’

ரேவதி பரபரத்தாள்,

      ‘வந்து அந்தக் குட்டியப் புடிங்கப்பா’

அவர் சிரித்து முடித்து, பேத்தியைப் பார்த்தார்.

காணவில்லை.

அந்த சைக்கிள் கேப்பில் குழந்தையும் குட்டியும் எஸ்ஸாகி இருந்தார்கள்.

மூவரும் ஹாலுக்குள் பிரசன்னமானார்கள்.

காணவில்லை.

கலவரப்பட்டு வெளியே ஓடினார்கள்.

காணவில்லை.

வெளி கேட் திறந்து கிடந்தது.

காமாட்சிக்கும் ரேவதிக்கும் பதற்றத்துடன் அழுகையும் எட்டிப்பார்த்தது.

ஈஸ்வரனும் சிறிது பதற்றப்பட்டார்.

வெளியே ஓடினார்.



(தொடரும்)


1 comment:

  1. மறுபடி ஒரு தேடலா.?இது அதே பக் கா ?

    ReplyDelete