ஒரே இருட்டாய்
இருந்தது. கண்ணை நன்கு திறந்து பார்த்தான். தலையின் பின்புறம் பயங்கரமாக வலித்தது.
முதல்
நாள் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தான்.
வழியில்
இருவர் இவனை மறித்து, துண்டுச் சீட்டை நீட்டி, ஏதோ முகவரி கேட்டார்கள்.
‘நேரா
போய், ரைட்ல கட் பண்ணுங்க,அப்படியே….’
பின்னந்தலையில்
‘ணங்’கென்று ஏதோ மோதியது போல இருந்தது.
இப்பொழுது
இருட்டுக்குக் கண்கள் பழகின.
ஒரு சின்ன
அறை, அதில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் தான் தரையில் கிடத்தப்பட்டிருப்பது புரிந்தது.
அந்த அறையில் ஒரு நாட்காலியிருந்தது. சுவரில் சில படங்கள் மாட்டியிருந்தன. பல நாட்கள்
மூடியிருந்த பழைய வாடை வீசியது.
கட்டுக்களை
விடுவிக்கப் போராடிப் பார்த்தான். நன்கு இறுக்கிக் கட்டியிருப்பார்கள் போல.
வாயிலும்
ஒரு பழைய துணியைத் திணித்திருந்தார்கள்.
அப்படியே
மரம் மாதிரி விட்டத்தை வெறித்தபடியே கிடந்தான்.
ஆளரவம்
கேட்டது.
கண்ணை
மூடிக்கொண்டான்.
கதவு
திறக்கப்பட்டது. இருவர் அவனை நோக்கி வந்தனர்.
‘என்னடா, போட்ட அடியில மேல போய்ட்டானோ?’
‘இருக்காதுடா, கடைசியாப் பார்த்த நேரம் மூச்சு
இருந்தது’
அருகில்
வந்து இவன் முகத்தில் டார்ச் லைட் ஒளியைப் பீச்சினார்கள். இவன் கண்களைக் குறுக்கினான்.
‘உயிர் இருக்குடா’
முகத்தில்
தண்ணீர் பீச்சி அடிக்கப்பட்டது. வாயிலிருந்து துணி உருவப்பட்டது.
இவன்
இருமத் தொடங்கினான்.
‘தண்ணி, தண்ணி….’
குடிக்கவும்
அதேபோல் தண்ணீர் பீச்சியடிக்கப்பட்டது.
கடைசியாக
ஒருவன் பேசினான்.
‘எங்களுக்கு
வேண்டியது பணம். உனக்கு 24 மணி நேரம் டைம். அதுக்குள்ள உங்காளுங்க நாங்க சொல்ற எடத்துக்குப்
பணத்தோட வரணும். இல்லன்னா…..’
கழுத்தில்
கத்தியை வைத்துச் சைகை காட்டினான்.
(தொடரும்)
துவக்கம் சுவாரசியம் தொடர்கிறேன்
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDelete