Monday, February 15, 2016

கொல், ஆனால் சொல்லாதே! - 1

அத்தியாயம் - ஒன்று

அழகான ஆபத்து காத்திருக்கிறது என்று சொன்ன போது யாரும் பெரிதாக எடுக்கவில்லை. எல்லோருக்கும் வயிற்றுப் பிரச்சினை அதைவிடப் பெரிதாக இருந்தது. அப்படி ஒரு பசி. பசியாறியபின் பார்த்துக்கொள்ளலாமென அந்த மூவரும் முடிவு பண்ணினார்கள். சாப்பிட்டு முடிக்க முன் அந்த 16 வயது மதிக்கத்தக்க, மிக அழகான இளம் பெண் ஒருத்தி அங்கு தோன்றினாள்.கையில் ஒரு சாக்குப் பை. அவள் உருவத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அழுக்குப் பை. பசி சிறிது ஆறிய நிலையில் பருவக் கிளர்ச்சி தலை தூக்கியது.

புகழ் முதலில் பேசினான்.

"ஏய், டேவிட் சொன்ன பொண்ணு நீதானா? , சொல்லு என்ன பண்ணனும்?"

மௌனமாக, மிக மிக மெதுவாக தலை அசைத்து ஆமென்றது. பார்க்கப் பாவமாக இருந்தது. விட்டால் அழுதுவிடும் போல.

"எங்களப்பத்தி சொல்லியிருப்பான்னு நெனைக்கிறேன். பக்கா கூலிப்படை. பணத்துக்காக என்ன வேணா செய்வோம். "

கண்களில் பயம் தெரிந்தது. எச்சில் விழுங்கி, பேசத் தொடங்கினாள்.

" என் பேரு பானுரேகா. நான் ஒரு தப்புப் பண்ணிட்டேன்."

சுந்தர் மேலே சொல்லுமாரு சைகை காட்டினான்.

"ரொம்ப நாளா என்னை எங்க வீட்டு டிரைவர் செக்ஸ் டார்சர் கொடுத்திட்டு இருந்தான்....."

சம்பத் குறுக்கிட்டான்,

" என்ன, போட்டுத் தள்ளணுமா?"

அவள் சிறிதாகப் புன்னகைத்தாள்.

"அதை நான் பண்ணிட்டேன். நீங்க அதை தள்ளிட்டுப் போனாப் போதும்"

அனைவரும் சிறிது அதிர்ந்து போனதென்னவோ நிஜம்.

தலையை மட்டும் நான் வெட்டி எடுத்திட்டு வந்திட்டேன்”,

பையை அவர்களிடம் நீட்டி

இதைப் புடிங்க முதல்ல….”

அந்த அழுக்குப் பையை மெதுவாக நகர்த்தினாள்.

ஒருத்தருக்கும் பேச்சு வரவில்லை. சுந்தர் சற்று தைரியமாக முன்னேறிப் பையை வாங்கினான்.


உள்ளே….. 


(தொடரும்)

2 comments:

  1. ஆரம்பமே சும்மா அதிருதில்ல

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி ஐயா

      Delete